TNHRCE Recruitment 2024 for Clerk and Various Posts

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

இத்திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் வெளித் துறை மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி உடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : எழுத்தர் ( Clerk )-01

சம்பளம் ரூ.15300-48700

கல்வித் தகுதி :பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பணியாளர்-01

சம்பளம் ரூ.15300-48700

அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாதஸ்வரம் (மேளம் குழு)-01

சம்பளம் ரூ.15300-48700

தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு அல்லது பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்த பெறும் இசை பள்ளியில் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தோட்டம் (உப கோயில்)-01

சம்பளம் ரூ.11600-36800

தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்கவும் வேண்டும்.

திருவலகு-01

சம்பளம் ரூ.10000-31500

தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்கவும் வேண்டும்.

விண்ணப்ப படிவம், தகுதிகள், நிபந்தனைகள் மற்றும் விவரங்களை https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 2.1.2024 ஆம் தேதி முதல் 31.1.2024 ஆம் தேதி வரை மாலை 5:45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாக ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் 610 204

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *