VA job-Authoor-Notification cancelled
PUBLISH DATE : 12/08/2022
செ.வெ.எண்:-24/2022
நாள்:10.08.2022
திண்டுக்கல் மாவட்டம்
ஆத்துார் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கான கிராம உதவியாளர்கள் தேர்விற்கான அறிவிக்கை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டத்தில் 2021-ம் ஆண்டு காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்திட, தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெற்றிட 17.08.2022 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அனுப்பிட விளம்புகை செய்யப்பட்டது.
மேற்படி கிராம உதவியாளர்கள் தேர்விற்கான அறிவிக்கை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் தேர்வு தொடர்பான இனவாரியான சுழற்சி அடிப்படையில் அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் என ஆத்துார் வட்டாட்சியர் திரு.சு.சரவணன் தெரிவித்துள்ளார்.
VA job-Authoor-Notification cancelled Click here