அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம்
கீழ்காணும் அரசு உதவி பெறும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தட்டச்சர்- இரண்டு
இளநிலை உதவியாளர் -4
ஆய்வக உதவியாளர்- 13
பதிவறை எழுத்தர் -3
நூலக உதவியாளர்- ஒன்று
அலுவலக உதவியாளர்-மூன்று
ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விதிகளின்படி
தட்டச்சர் -பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆபீஸ் ஆட்டோ மேசன் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
இளநிலை உதவியாளர் /ஆய்வக உதவியாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதிவறை எழுத்தர்/ நூலக உதவியாளர் : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு தமிழ்நாடு அரசு விதிகளின்படி
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்றிதழ் நகல், தொழிநுட்ப கல்வி சான்றிதழ் , ஜாதி சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல்கள் மற்றும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் செயலர், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பழனி-624601. திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பெறப்படும் விண்ணப்பங்ககளில் தகுதியுடைய நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 9.10.2023 மாலை 5 மணி வரை
NOTIFICATION CLICK HERE

