Guziliamparai Village Assistant Job – Notification

குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவு, நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குஜிலியம்பாறை வட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

காலிப்பணியிட கிராமங்கள் விபரம்

1.சின்னுலுப்பை -பொது-முன்னுரிமையுடையவர்கள்

2.கரிக்காலி – எம்பிசி மற்றும் டிஎன்சி முன்னுரிமையுடையவர்கள்

3.ஆர்.புதுக்கோட்டை – பிசி – முன்னுரிமையுடையவர்கள்

4.நாகையகோட்டை-பொது முன்னுரிமையற்றவர்கள் -(பெண்கள்)(ஆதரவற்ற விதவை)

முன்னுரிமையுடைவர்கள் – ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம், முன்னாள் இராணுவத்தினர், சொந்த நிலங்களை அரசு பயன்பாட்டிற்காக கொடுத்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசாணை (நிலை) எண்: 122, நாள்: 02.11.2021 ல் சொல்லப்பட்ட நபர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளை கொண்ட நபர்கள் மேற்படி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் இணையதளம் https://cra.tn.gov.in, வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வமான இணைதளம் http://www.dindigul.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக 07.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *