TN District Child Protection Office Recruitment 2022

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் சட்டம் சார்ந்த படிப்பில் பி .எல் அல்லது எல்.எல்.பி ரெகுலர் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

குழந்தைகள் நலன், சமூக நலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டம் சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

மாத ஊதியம் ரூபாய் 21 ஆயிரம் வழங்கப்படும்.

இப்பணிக்கு ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கொள்கை உருவாக்கத்திலோ அல்லது திட்ட நடைமுறைப்படுத்தலிலோ பணிபுரிந்து அரசிதழ் பதிவு பெற்ற அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.வயது 62 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 25.6.2022 க்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Notification Click here

Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *