செ.வெ.எண்:-18/2022
நாள்:09.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு, நத்தம் வட்ட அளவில் பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைக் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 25.05.2022-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நத்தம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட நத்தம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க தகுதிகள்:-
1.கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்
3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
4.காலியிட கிராமங்களின் விபரம்:-
1.பாப்பாபட்டி : BC(M) – பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள்(முன்னுரிமை பெற்றவர்)
2. ஆவிச்சிபட்டி:- SC -ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
3. செல்லப்ப நாயக்கன்பட்டி :- MBC/DNC- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்)
5. காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது
அ) பணியிடம் காலியாக உள்ள கிராமம்.
ஆ) 2 கி.மீ சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,
இ) தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
6. மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட 3 கிராம உதவியார்கள் பணியிடத்திற்கு விண்ணப்பம் 25.05.2022-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நத்தம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
Natham Taluk Office – Village Assistant Vacancy Click here