கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வந்தாச்சு..!
தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் 2018 ல் பெறப்பட்டது.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம் : இதற்கான நேர்காணல் தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை அலுவகத்தில் ஏப். 25 முதல் ஏப். 29 வரை நடைபெற உள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதார்கள் தகுந்த ஆதாரங்களுடன் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நேர்காணலில் பங்கேற்கலாம்.
நேர்காணல் அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தை உரிய ஆதாரங்களுடன் அனுகி நேரில் அழைப்பாணையை பெற்றுக்கொள்ளலாம்.