தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு திங்கட்கிழமை முதல் வருகிற 23ந் தேதி வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வந்தாச்சு..!
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம் : திங்கட்கிழமை முதல் வருகிற 23.4.2022 வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்லது பள்ளி தலைமையாசிரியரிடம் நன்னடத்தை சான்று, டிரைவர் லைசென்ஸ் இருந்தால் அதன் நகல், முன்னுரிமை கோருபவர்கள் தகுதியான அலுவலரிடம் பெற்ற சான்று, ஆதார், ரேஷன் கார்டு நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள்..?
நேர்காணல் அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் வரும் 23- ந்தேதி வரை வேலை நேரங்களில் தர்மபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் நேரில் அழைப்பாணையை பெற்றுக்கொள்ளலாம். நேர்காணல் அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.