கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 21 ந் தேதி தொடங்கி 26 ந் தேதி வரை நடக்கிறது என்று கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் இடம் : கரூர் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாட்கள் : வரும் 21-ந் தேதி முதல் வரும் 26 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி முதல் நடைபெற உள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும்,
அதனில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சன்றுகளுடன் கரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளவும், மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை வலைதளத்திலிருந்து வரும் 20-ந் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.