தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு,
சென்னை-5, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் கால்நடை பராமரிப்பு பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 20.4.2022 முதல் 20.5.2022 மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்பு பணி : 01
சம்பளம் ரூ.10000-35100/-
வயதுவரம்பு : 1.4.2022 அன்று உள்ளபடி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-5.
விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/hrcehome/index.php மற்றும் https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5 என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.