மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் காஞ்சிபுரம் மண்டலம் குறு அறிவிப்பு:
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள (காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அடங்கியது)
கூட்டுறவு நிறுவனங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளர்கள் மற்றும் 64 கட்டுநர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் காஞ்சிபுரம் மண்டலம் மூலம் 20.6.2020 தேதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 10.12.2020 முதல் 24.12.2020 வரையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 25.8.2021 அன்று நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் 17.11 2021 தேதிய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் ஆகியவற்றினை செயல்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் 20.6.2020 அன்று காலிபணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
Notice Click here