தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் , கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முகத்தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு (14.02.2018 முதல் 28.02.20218 முடிய உள்ள)
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு 20.4.2022 முதல் 22.4.2022 வரை( 23.4.2022,24.4.2022 நீங்கலாக) 25.4.2022 முதல் 30.4.2022 வரை
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து தினமும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை (1 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை தவிர்த்து ) நடைபெற உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பு கடிதம் தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டு உள்ளது எனவும் நேர்முக அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பானை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்றால் தகுந்த ஆதாரங்களுடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் வளாகம், இணைப்பு கட்டிடம் , மூன்றாவது மாடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் நகலை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களின் விபரம் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதள முகவரியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முகத்தேர்வு அல்லது Animal Husbandry Assistant Interview என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேர்முக அழைப்பானை இல்லாதவர்கள் நேர்முகத்தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கால்நடை பராமரிப்பு உதவியாளரின் பணிகள் :–
கால்நடை நிலையத்தை சுத்தமாக வைத்திருத்தல்
கால்நடை மருத்துவர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது உதவி செய்தல்.
கால்நடைகளுக்கு ஏற்பட்ட புண்கள் , காயங்கள் போன்றவற்றுக்கு மருந்துகள் போடுதல்.
முகாம்களுக்கு பொருட்கள் மற்றும் மருந்துகளை எடுத்து வருதல் கொண்டு செல்லுதல் .
அலுவலர்கள் கோரும் அனைத்து அலுவலக பணிகளையும் செய்தல்.
Animal Husbandry Assistant – Interview Date & Time Details Click here
Animal Husbandry Assistant – Interview Date & Time Details Click here