மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி : ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
1.7.2021 அன்று உள்ளபடி 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் ஆகியோருக்கு 37 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், மயிலாடுதுறை வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரம் கல்வித்தகுதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பக பதிவு விவரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய முகவரி எழுதப்பட்ட ரூபாய் 25/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25 X 10 சென்டி மீட்டர் அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 3.2.2022 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்க வகையில் அனுப்பிவைக்க வேண்டும்.
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி அமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.