அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காப்பீடு முகவர் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மண்டல பணியாளர்கள் , ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர் ,கிராமத் தலைவர் , கிராம சபை உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் பாலிசி பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் மட்டும் ரூபாய் 5 ஆயிரம் காப்பீட்டு தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் பின்னர் செலுத்த வேண்டும்.
தங்களது ஏஜென்சி காலம் முடிக்கப்படும் போது காப்பீட்டு தொகையாக செலுத்தப்பட்ட பணமானது தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் வரும் 27-ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் திவ்யா சந்திரன் கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி- 628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Tamilnadu Post office Jobs 2022 Click here