தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்கண்ட பட்டியலில் உள்ள ஒரு காலிப்பணியிடத்தினை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களியிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர் : புறத்தொடர்பு பணியாளர் : 01
ஒப்பந்த ஊதியம் மாதத்திற்கு ரூபாய் 8000
கல்வித்தகுதி மற்றும் அனுபவம் :-
புறத்தொடர்பு பணியாளர் பணி
பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தை தொடர்பான பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.1.2022
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம்,
கல்யாணராமபுரம் 1- ஆம் வீதி ,
திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை – 622 002.
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனைத்து சான்றுகளுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 13.01.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
District Child Protection unit Recruitment 2022 Click here
District Child Protection unit Recruitment 2022 Application Click here