மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ/வருவாய் கிராமங்களுக்கு 21 தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை /இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியயல், வேதியியல், நுண்ணுயிரியல் தாவரவியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை/ இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருந்தால் மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
31.12.2023 அன்றைய தேதியின்படி வயது 35க்குள் இருக்க வேண்டும் மற்றும் நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மாதாந்திர ஊக்க ஊதியம் ரூபாய் 15,000 வழங்கப்படும்
விருப்பமுள்ளவர்கள் 15.03.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், எண் . 77, சூரிய நாராயணா செட்டி தெரு, ராயபுரம், சென்னை -13