தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2022,( இந்திய குடியுரிமை உடையவர்கள் மட்டும்) விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஊதிய விகிதம் ரூபாய் 18,200 – 67,100
இத்தேர்வுக்கான முக்கிய நாட்கள் :-
அறிவிக்கை நாள் : 30.6.2022
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் 7.7.2022
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 15.8.2022
தேர்வுகள் நடைபெறும் நாள் :பின்னர் அறிவிக்கப்படும்
மொத்த காலியிடங்கள் : 3552
கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் ரூபாய் .250
வயது :-
அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு
பொதுப் பிரிவினர் 1.7.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 1.7.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் /ஆதிதிராவிடர் அருந்ததியர் /பழங்குடியினர் 1.7.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர் 1.7.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
ஆதரவற்ற விதவைகள் 1.7.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 37 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெற உள்ள ராணுவத்தினர் 1.7.2022 அன்று 47 மேற்படாதவராகவும்இருக்க வேண்டும்.
TNUSRB Recruitment 2022 for 3552 Constable Posts Click here
TNUSRB Recruitment 2022 for 3552 Constable Posts Application Click here