சென்னை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன.
பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் 12 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தமிழில் எழுத. படிக்கத தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 1.7.2022 தேதியில் SC/ST – 18 முதல் 37, BC, BCM, MBC & DNC – 18 முதல் 34, இதர பிரிவினர் 18 முதல் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேற்படி தகுதிகளுடன் சென்னை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, கல்வித்தகுதி மற்றும் வயது, சாதிச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, வேலை வாய்ப்பக பதிவு (இருப்பின்) ஆகிய சான்றுகளின் நகல்கள் இணைத்து 30.05.2022-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீறுபான்மையினர் நல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
Notification Click here