விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு
கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விருதுநகர் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கம் , சாத்தூர் ரோடு , விருதுநகர் என்ற முகவரியில் 28.4.2022 முற்பகல் முதல் 9.5.2022 பிற்பகல் வரை ஆம் தேதி 9 நாட்களுக்கு ( அரசு விடுமுறை நாட்கள் 1.5.2022, 3.5.2022, 8.5.2022 தவிர) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நேர்காணல் நடைபெற உள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்துகொள்வதற்கான புதிய நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேர்முக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியல் விருதுநகர் மாவட்ட வலைத்தளமான https://virudhunagar.nic.in/ -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் வரும் 25.4.2022 மற்றும் 26.4.2022 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை தகுந்த ஆதாரங்களுடன் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். புதிய நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
TNAHD Virudhunagar Interview Date and Time Click here