புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வு 20.4.2022 முதல் 30.4.2022 வரை நடைபெற உள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு
துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கால்நடை பண்ணை வளாகம், மச்சுவாடி, தொழிற்பேட்டை (அஞ்சல்) புதுக்கோட்டை – 622 004 என்ற முகவரியில் 20.4.2022 முதல் 30.4.2022 வரையும் (24.4.2022 ஞாயிறு நீங்களாக)
தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெற உள்ளது தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பானை தனியே அஞ்சலில் அனுப்பப்பட உள்ளது எனவும், அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அழைப்பிதழ் கிடைக்கப் பெறவில்லை என்றால் அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நேர்முக அழைப்பானை இல்லாதவர்கள் நேர்முகத்தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Interview for Assistant Post in Animal husbandry department Click here
tnahd pudukkottai interview date