கால்நடை பராமரிப்பு துறையில் விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு
கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வு பாளையங்கோட்டை , TDTA பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குறைந்தோர் சிறப்புப்பள்ளியில் 11.5.2022 முதல் 21.5.2022 வரை தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நேர்காணல் நடைபெற உள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்துகொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் 10.5.2022 ஆம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் திருநெல்வேலி ,கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
TNAHD Tirunelveli District Interview Date and Time Click here