Social Welfare Dept
PUBLISH DATE : 03/03/2022
செ.வெ.எண்:-05/2022
நாள்:03.03.2022
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2 பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
வழக்குப்பணியாளர் -1 மற்றும் வழக்குப்பணியாளர்- 2
காலிப்பணியிடம் மொத்தம் – 5
மாத ஊதியம் 15000/-
வயது வரம்பு 40 வயதிற்குள்
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பயணச்செலவு மீள பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
BSW / MSW சமூகப்பணி / உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை (அ) முதுகலை
பல்நோக்கு உதவியாளர்:
காலிப்பணியிடம் மொத்தம் – 1
மாத ஊதியம் 6400/-
வயது வரம்பு 40 வயதிற்குள்
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
8th Pass / 10th Pass / 10th Fail
பாதுகாவலர்:
காலிப்பணியிடம் மொத்தம் – 1
மாத ஊதியம் 10,000/-
வயது வரம்பு 40 வயதிற்குள்
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
8th Pass / 10th Pass / 10th Fail
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரை தளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 18.03.2022 மாலை 05.45க்குள் அனுப்பப்பட வேண்டும்.
Tamilnadu Social Welfare Department Recruitment 2022 Click here