Recruitment of One Stop Centre (OSC)

தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண் 303, மூன்றாவது தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு வரும் 15.3. 2022 மாலை 5.30 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடர்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராக இருத்தல் வேண்டும்

வழக்கு பணியாளர்-1 ( மகளிர் மட்டும் ): 02

சம்பளம் ரூ.15000/-

MSW

மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வழக்கு பணியாளர்-2 ( மகளிர் மட்டும்) : 02

சம்பளம் ரூ.15000/-

MSW

மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்களை சென்றடைய செய்ய ஆர்வம் உடையவராக இருத்தல் வேண்டும்.

பாதுகாவலர் : 01

சம்பளம் ரூ.10000/-

10th

பல்நோக்கு உதவியாளர்( மகளிர் மட்டும்) : 01

சம்பளம் ரூ.6400/-

எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சுழற்சி முறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Recruitment of One Stop Centre (OSC) Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *