TNHRCE Recruitment 2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை, திருத்தணிகை வட்டம், திருவள்ளூர் மாவட்டம் 631209,

தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்தல்:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் நாதஸ்வர ஆசிரியர் மற்றும் தவில் ஆசிரியராக பணியாற்ற மாதம் ஒன்றுக்கு ஒப்பந்த ஊதியம் ரூ 35000-ம் என்ற அடிப்படையில் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 16.2.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும், இசைக் கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது யாதொரு அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் நாதஸ்வரம் / தவில் பள்ளிகளில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வாத்யவிசாரதா சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுவரம்பு: இந்த விளம்பர அறிவிப்பு அன்று( 12.01.2022) 35 வயது பூர்த்தி அடையாதவராக இருத்தல் வேண்டும்.

இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் திருக்கோயிலின் இணையதளம் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற முகவரியில் கல்வித்தகுதி,வயது, மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் இதர நிபந்தனைகளை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *