Tamilnadu Post Office Jobs 2022- 10th Pass

அஞ்சல் துறையில் வரும் 28-ஆம் தேதி நேர்காணல்!

கோவை அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் முகவரி பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 28-ஆம் தேதி நடக்கிறது.

இந்திய அஞ்சல் துறையின் கோவை கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் மற்றும் கள அதிகாரிகள் தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு வரும் 28-ஆம் தேதி கோவை தலைமை தபால் நிலையம், முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க இருக்கிறது,

இதற்கு 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 65 வயதிற்கு உட்பட்ட மத்திய, மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 28-ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் காலை 10.00 மணிக்குள் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து சேரவேண்டும்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பப்படிவங்கள் அனைத்து தபால் நிலையங்களிலும் நேரடியாக சென்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *