Kanadukathan Town Panchayat Recruitment 2022

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணி இடத்தை பூர்த்தி செய்வதற்கான நேர்காணல் எதிர்வரும் 7.2.2022 ஆம் தேதி திங்கட்கிழமை 11:30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

பதவியின் பெயர் : தூய்மை பணியாளர் (பெண்)

கல்வித் தகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 1.1.2021 அன்று 18 வயது முடிவடைந்த இருக்க வேண்டும்.

ஊதிய விகிதம் : ரூ.15700-50000/-

நியமன இன சுழற்சி : ஆதிதிராவிடர் (பெண்) முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் (கணவரை இழந்தவர்)

கல்வி சான்று, ஜாதி சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை, வேலை வாய்ப்பிற்கான பதிவு அட்டை, முன்னுரிமை பெற்றுள்ளமைக்கான சான்று (உரிய அலுவலரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்) அனுபவ சான்று ஆகியவற்றின் சான்றிடப்பட்ட நகல்களுடன் 4.2.2022 -ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கப் பெறுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: செயல் அலுவலர், கானாடுகாத்தான் பேரூராட்சி அலுவலகம், கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டம் – 630 103 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பேரூராட்சியில் நடைபெறவுள்ள நேர்காணல் குறித்த விவரம் பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் பதிவஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும் நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Kanadukathan Town Panchayat Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *