தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தருமபுரி மாவட்டம்,
அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிக்கை
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 04
ஊதியம் : ரூ.15700-50000/-
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 அன்று பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.
GT : 32
BC/BCM/MBC/DNC : 34
SC/ST/SCA : 37
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.11.2023 பிற்பகல் 5.45 மணி வரை
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாவது தளம், தரு மபுரி – 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.